வியாழக்கிழமை, 24 மே 2012

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

 

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை  கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டள்ளது.

மொஹமட் நஷீட்டின் ஆதரவாளகள் தலைநகர் மாலேயிலுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் தூரப்பிரதேசங்களிலுள்ள சில பொலிஸ் நிலையங்களையும் கைபற்றியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மொஹமட் நஷீட்டை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 10 தீவுகளை மொஹமட் நஷீட்டின் ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

மொஹமட் நஷீட்டின் குடும்பத்தினர் பாதுகாப்பு தேடி நேற்று இலங்கைக்குக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.


 

Views: 2943

Comments   

 
0#meenavan2012-02-10 03:01
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, பதவியை இராஜினாமா செய்துள்ள நிலைமையில், குற்றவியல் நீதிமன்ற கைது உத்தரவு நாட்டில் மேலும் பதற்றத்தையே உருவாக்கும். வருந்த்ததக்க நிகழ்வு.
Reply
 
 
0#pasha2012-02-10 19:49
மக்களால் தெரிவு செய்யபட்டவர்கள் நீதி துறையில் கை வைக்கும் போது இந் நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.