(எஸ்.சுவர்ணஸ்ரீ,ஆர்.கமலி )
சாமிமலை மல்லியப்பூ தோட்டத்திலுள்ள காட்டில் மான் ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்க முயன்ற இருவரை மஸ்கெலியா பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற மஸ்கெலியா பொலிஸார் 40 கிலோ மான் இறைச்சியுடன் இச்சந்தேக நபர்களை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

