வெள்ளிக்கிழமை, 25 மே 2012

6 ஐ.தே.க. எம்.பிகள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

 

(இந்திக சிறி அரவிந்த)

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கட்சி அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக  வாக்களித்ததுடன் அரசாங்க வரிசைக்கு மாறியதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டடுள்ளது.

இந்த எம்.பிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அப்துல் காதர், லக்ஸ்மன் செனவிரட்ன, ஏர்ல் குணசேகர,  உபேக்ஷா சுவர்ணமாலி, என். விஜேசிங்க, மனூஷ நாணயக்கார ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசைக்கு மாறியமை குறிப்பிடத்தக்கது.

Views: 1926

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.